ரஷ்ய எரிபொருள் தடை – மசகு எண்ணையின் விலை சடுதியாக உயர்வு

ரஷ்யாவின் எண்ணெய், மற்றும் ஏனைய எரிபொருட்களின் இறக்குமதிகளுக்கான தடையொன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மார்ச் 8 ம் திகதியன்று அறிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரேன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் இந்த அறிவிப்பை விடுத்திருந்தத்துடன், இந்தத் தடையின் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதை பைடன் ஏற்றுக் கொண்டிருந்தார்.

அமெரிக்காவானது தனக்குத்தேவையான திரவ எரிபொருளில் எட்டு (8%) வீதத்தினை ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதி செய்துகொள்கிறது. இந்த நிலையில், மசகு எண்ணெயின் விலை தற்போது பரலொன்றிற்கு $130 ஆக உலக சந்தையில் உயர்ந்திருக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பொரிஸ் ஜோண்சன்

இதேவேளை, ஜனாதிபதி பைடனின் இந்த அறிவித்தலுக்கு முன்னர், இவ்வாண்டு இறுதியுடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய்த் தயாரிப்பு இறக்குமதிகளை தாமும் நிறுத்தப்போவதாக பிரித்தானியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love