ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 15 ல் பேச்சுவார்த்தை ?

ஜனாதிபதிக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அறியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக வெளிவந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார்.

அண்மைக்காலங்களில் ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அச்சந்திப்புக்கள் எதுவும் திட்டமிட்டபடி நடைபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தால் நேற்றய தினம் கூட்டமைப்பின் தலைவருக்கு உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் சமல் ராஜபக்சவும் உடனிருப்பார் என என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கில் அரசினால் செயற்படுத்தப்படுகின்ற காணி சுவீகரிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட சந்திப்பும் வழமாய் போன்று இறுதி நேரத்தில் இடம்பெறாமலேயே போய்விடுமோ என்ற ஐயம் அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

.

Spread the love