விஜய் டிவியில் புத்தம் புது சீரியல்! கதை என்னவாக இருக்குமோ..??

தற்போது சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் தமக்குள் போட்டி போட்டுகொண்டு ரசிகர்களின் விருப்புக்கேற்ப தற்போது புதுப்புது அட்டகாசமான மெகா சீரியல்களை களமிறக்கி வருகின்றன. சமீபத்தில்விஜய் டிவி நிர்வாகத்தால் தொடங்கிய வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் அடுத்து என்ன சீரியல் ஆரம்பிக்கப்படப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு பதில் தற்போது கிடைத்துவிட்டது. ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் தான் புது சீரியலை விஜய் டிவி தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக அதனது பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறன.

இதில் நடிக்கப்போகும் ஹீரோயார்?, மற்றும் ஹீரோயின் யார்? என்கிற தகவல்கள் தற்போது வரை வெளிவராமலேயுள்ளன. இந்த சீரியலின் பெயரையும் பழைய திரைப்பட பெயரிலிருந்து எடுத்துள்ளார்கள். அந்த படத்தை போலவே இளம் விதவையை திருமணம் செய்ய முடிவெடுக்கும் ஒரு நபர் பற்றிய கதையாக இருக்குமோ என்கிற கேள்வியும் சீரியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

சிப்பிக்குள் முத்து’ சீரியலில் கதை என்ன? மற்றும் நடிகர்கள் யார் யார் ?, என்பன பற்றிய விவரங்கள் விரைவில் பொதுவெளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அதன் பூஜை ஸ்டில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 😊 😊

Spread the love