சீத்தாப்பழம் (அன்னமுன்னா) என்ன செய்யும்?

பழங்களில் சீத்தாப்பழம் என்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.  தற்போது சீத்தாப்பழத்தினை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

  1. இதய நோய் வராமல் தடுக்கும்.

  2. நினைவாற்றலை அதிகரிக்கும்.

  3.  ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

  4. உடல் எடையைக் குறைக்கும்.

  5. கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

  6.  உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.  

  7.  ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.

  8.  உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும்.

  9.  உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.

  10. உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.  
Spread the love