இன்று முதல் தினமும் மின்வெட்டு

இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்படும் முறை மற்றும் அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Spread the love