டாடா குழுமத்தின் வசமாகும் எயார் இந்தியா

எயார் இந்தியா விமான நிறுவனம், இந்த வார இறுதியில், டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எயார் இந்தியா எக்ஸ்பிரஸ், எயார் இந்தியா ஏஸ் ஏடி எஸ் சேவை வழங்கல் நிறுவனத்தின் 50 சத வீதமான பங்குகள், டாடா குழு மத்திடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.

இதன் மூலமாக, டாடா குழுமத்தின் கட்டுப் பாட்டில், இயங்கும் 3 ஆவது விமான நிறுவனமாக எயார் இந்தியா மாறியுள்ளது. எயார் இந்தியாவை, விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில், மத்திய அரசாங்கமும், டலேஸ் நிறுவனமும், கடந்த ஒக்ரோபர் மாதம் கையொப்பமிட்டிருந்தமை, குறிப்பிடத்தக்கது.

Spread the love