சம்பிக்கவின் விசாரணை எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (21/01) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு திகதியிடப்பட்டது.

இதேவேளை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு எந்தவிதமான நோய் தாக்கங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு 10 விதமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி, கொழும்பு மேல் நீதிமன்றுக்கு இன்று அறிவித்திருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணைகள் இதுவரை இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Spread the love