கிளி/ சாந்தபுரம் கிராமம் முல்லைக்குள் உள்வாங்கப்படுமா ? மக்கள் விசனம்

கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம், எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தெளிவற்ற தகவல்களால் சாந்தபுரம் கிராமத்தவரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 32 வருடங்ஙகளாக கிளிநொச்சி நிர்வாகப் பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம் கிளிநொச்சி நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த விசனம் அடைந்துள்ளனர்.

மக்களிடையே ஏற்பட்ட இந்தக் குழப்பம் தொடர்பில் ஆய்வுக்கு கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்களது கரிசனைகள் அனைத்தையும் தெளிவுபடுத்திஅது தொடர்பான கடிதத்தை எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பது குறித்தும், பாராளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வது குறித்தும் ஆராயப்பட்டது.

Spread the love