கொழும்பில் நாளை நள்ளிரவு தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு தொடக்கம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு – 12, கொழும்பு – 13, கொழும்பு – 14, கொழும்பு – 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை நள்ளிரவு தொடக்கம் 12 ஆம் திகதி மாலை 06 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

Spread the love