எரிபொருள் நெருக்கடியால் மக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் டீசல் கொள்வனவிற்கான நீண்ட வரிசையை நேற்றுக் காணமுடிந்தது. அதிகளவிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இருக்கவில்லை என்பதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தளவில் எரிபொருள் இருந்தாலும் அதனை பெற்றுக் கொள்ள பல மணித்தியாலங்கள் மக்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில், பொறுமையை இழந்த மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். அம்பாந்தோட்டை, ரன்ன வாடிகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்ள பல நாட்கள் முயற்சி செய்த மக்கள் அது கிடைக்காமையினால் இறுதியில் நேற்றுக் காலை மாத்தறை – வெல்லவாய வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாவத்தகம் – பீலிகட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்கள் முயற்சி செய்த மக்கள் நேற்று குருநாகல் – கண்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

source from news first

Spread the love