டிவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பினால் இந்தியர்கள் பலர் தொழிலை இழந்தனர்!

பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் 50 வீதமான ஆட்குறைப்பினை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள டிவிட்டரின் மார்க்கெட்டிங், பொறியியல், தொடர்பு அலுவலர்கள் பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்று தகவல் இல்லை . அவர்களுக்கு பணி இழப்பீட்டுத் தொகை தரப்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழியர்கள் பணி நீக்கம் காரணமாக டிவிட்டர் அலுவலகங்கள் சில இடங்களில் மூடப்பட்டிருந்தன. இதனால் சில பகுதிகளில் டிவிட்டர் சேவை முடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

Spread the love