KKR அணித்தலைவராக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

I.P.L ரி-20 தொடருக்காக 12.25 கோடி ரூபாவிற்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 ஆவது I.P.L  T-20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் , குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐ.பி.எல் போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி 12.25 கோடி ரூபாவிற்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைவராக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் நன்றி தெரிவித்துள்ளார்.

https://mobile.twitter.com/KKRiders/status/1493894709479362562

Spread the love