2024 ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க அனுமதி- ஜெலென்ஸ்கி கண்டனம்!

2024 ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்களை பங்கேற்க அனுமதிப்பது ஒருவகையில் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடமும் தெரிவித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் நடத்தவுள்ளது.

இது ஜூலை 26 ஆம் தேதி பாரிஸில் தொடங்குகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பு ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்போம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love