வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் அமைச்சர் ஜொன்ஸ்டன்

அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதோச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (28/01) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறிராகல உத்தரவிட்டார்.

Spread the love