விஜயகலா மகேஸ்வரன் வழக்கின் ஆலோசனை அறிக்கை கோரல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் கோரியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து அன்று அவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Spread the love