லக்னோ அணி கப்டன் ராகுலுக்கு அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணியின் கப்டன் கே.எல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 37 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை-லக்னோ அணிகள் மோதின. இந்தப் போட்டியின் போது பந்து வீசுவதில் லக்னோ அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கப்டன் கே.எல் ராகுலுக்கு ஐ.பி.எல் விதிப்படி 24 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. மற்ற வீரர்களுக்கு ரூபா 6 லட்சம் அல்லது அவர்களது போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Spread the love