ரஷ்யாவில் உள்ள கனடியர்களை வெளியேறுமாறு அறிவிப்பு

ரஷ்யாவில் தங்கியுள்ள கனடியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்கத்தின் இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள கனேடியர்கள் வாய்ப்புகள் கிடைக்கும்போது வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும் கனேடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் போர் நெருக்கடியினால், வரையறுக்கப்பட்ட விமான சேவை வாய்ப்புகள் மற்றும் நிதி பரிமாற்ற கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love