யார் சொன்னாலும் பதவி விலகேன் – பிரதமர் மகிந்த 

யார் சொன்னாலும் தான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாருக்காவது என்னை பதவியை விட்டு அனுப்ப முடியுமானால் அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னை பதவி விலகுமாறு ஒவ்வொருவராகக் கூறினாலும் இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத்தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முன்னாள் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.


எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்போதுள்ள வரிசைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்

Spread the love