உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மைகள் விரைவில் வெளிவரும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சிலர் தங்கள் சொந்தங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்தநிலையில் அதன் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் பாரம்பரிய வைபவ வழிபாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை தெய்வீக சக்திகள் விரைவில் வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை மறைப்பவர்கள் நம்மை தவறாக வழிநடத்தலாம். இருப்பினும் நாங்கள் தவறான வழியில் செல்லமாட்டோம். தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் தங்கள் துரோகங்களைக் காட்டிக் கொடுக்கும் நிலையில், தெய்வீக உதவியுடன் உண்மை வெளிவரும் என்று கர்தினால் கூறியுள்ளார்.

தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர். அமைச்சர்கள் தினமும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதுடன், உண்மையை மறைக்கவும் முயற்சிக்கின்றனர் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love