முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

முன்பதிவு செய்துகொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 17ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love