மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி?

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரி அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முறையான வழிகளில் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி: விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் சட்டப்பூர்வ வழிகள் மற்றும் வங்கி மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

மின்னேற்ற வசதி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிமுகப்படுத்தியுள்ள வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிரதான மின்சக்தி அமைப்புக்கு வெளியே சூரிய சக்தியுடன் வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கும் புதிய மின்னேற்ற வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.    

Spread the love