மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகினார் ஜோகோவிச்

இந்த வருடம் நடைபெறும் முதல் இரண்டு மாஸ்ட்ர்ஸ் தொடர்களான இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி பகிரங்க டென்னிஸ் ஆகிய போட்டிகளிலிருந்து சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார்.

அமெரிக்காவில் அமுலில் உள்ள கடுமையான கொரோனா தொற்று சுகாதார விதிகள் காரணமாக அவர் இந்த இரண்டு போட்டிகளையும் தவிர்க்க தீர்மானித்துள்ளார். அமெரிக்க பிரஜைகள் இல்லாத எவரும் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பது அந்நாட்டிலுள்ள கடுமையான சுகாதார விதிகளில் ஒன்றாகும்.

கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவில்லை என பி.பி.சி செய்திச் சேவைக்கு கடந்த மாதம் நோவாக் ஜோகோ விச் தெரிவித்திருந்தார். இதேவேளை, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மொன்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்குபற்றுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. 

Spread the love