பூமியை தாக்க வாய்ப்புள்ள சிறுகோளை திசை திருப்பும் நாசாவின் முயற்சி வெற்றி

பூமியை தாக்க வாய்ப்புள்ள சிறுகோள் மீது விண்கலத்தை வெற்றிகரமாக மோதச்செய்து நாசா சாதனை படைத்துள்ளது. சூரிய மண்டலத்தில் பூமியை சுற்றி இலட்சக்கணக்கான வால் மீன்கள், சிறுகோள்கள், விண் கற்கள் சுற்றி வருகின்றன. இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரகத்தை பாதுகாக்கும் நோக்கில் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் வகையில் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ) ஒன்றை நிறுவி உள்ளது. இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடி மோஸ் பைனரி என்ற சிறு கோளை கண்டுபிடித்தது. இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோள் பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசை திருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த முயற்சி வெற்றியளித்துள்ளது. இதனால் பூமியை மோதவிருந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து நீங்கியுள்ளது. 

இதேவேளை சிறுகோள் மீது விண்கலம் மோதும் வீடியோவை நாசா தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளது. சிறுகோளை கண்டு பிடித்தது. இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோள் பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசை திருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த முயற்சி வெற்றியளித்துள்ளது. இதனால் பூமியை மோதவிருந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து நீங்கியுள்ளது.  இதேவேளை சிறுகோள் மீது விண்கலம் மோதும் வீடியோவை நாசா தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளது.

Spread the love