புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின..

2021 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் இரவு 13ம்திகதி சுமார் 10 மணியளவில் வெளியாகியிருந்தன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, அசாதாரணமான பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சை நடைபெற்றது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இது 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றது.

Spread the love