பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் ஆரம்பம்

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும்பண்டாரவினால் பரிந்துரைக்கப்பட்டதுடன், லக்ஷ்மன் கிரியெல்லவினால் ஆதரவளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு வேட்புமனு தாக்கல் செய்தமையால் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றையதினம் பாராளுமன்றில் பெரும்பாலான ஆசனங்கள் நிரம்பியுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. இன்னும் சில நேரத்தில் பிரதி சபாநாயகர் யார் என்பது தொடர்பில் முடிவு வெளியாகும்.

Spread the love