திருமலை எண்ணெய்க் குதக் குத்தகை 50 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

குத்தகையை நீட்டிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்றும் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை இணங்கியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்திய எண்ணெய் நிறுவனமான LIOC இன் உள்ளூர் நிறுவனங்களுடனான 2002 உடன்படிக்கையின் நீட்சியே இது என்றும் கம்மன்பில கூறினார்.

இரண்டாம் உலகப் போரின் போது விநியோகத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட தீவின் மிகவும் மூலோபாய எண்ணெய் சேமிப்பு வளாகம் தொடர்பில் 2002 ஆம் ஆண்டு இலங்கையானது இந்தியாவுடன் அசல் ஒப்பந்தத்தில் நுழைந்தது.

நேச நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானிய ஆட்சியாளர்கள் கட்டியிருந்த திருகோணமலை தொட்டிப் பண்ணையில் இந்தியா எல்லா காலங்களிலும் ஒரு மூலோபாய ஆர்வத்தைக் காட்டி வந்தது.

50 வருட குத்தகைக்கு 99 டாங்கிகளில் 14 தொட்டிகளை மட்டுமே LIOC கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என இங்கு செய்தியாளர்களிடம் பேசிய கம்மன்பில கூறினார்.

மொத்தமுள்ள 99 டாங்கிகளில் 61 டாங்கிகள் அரச எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசி) மற்றும் எல்ஐஓசி ஆகியவற்றுக்கு இடையே உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும், மேலும் சிபிசி பெரும்பான்மையான 51 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.

குதங்களின் முழுமையான கட்டுப்பாட்டை மீளப் பெறுவதே தமது நோக்கமாக இருந்ததாக முன்னர் கூறியிருந்த கம்மன்பில, புதிய ஒப்பந்தம் “இலங்கைக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறினார்.

உள்ளூர் பொருளாதாரத்தில் அந்நியச் செலாவணி நெருக்கடி உச்ச மட்டத்திற்கு சென்றுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை இந்தியாவின் உதவியை நாடுவதன் பின்னணியில் அடுத்த வாரம் ஒப்பந்தம் முறைப்படுத்தப்படும்.

கச்சா எண்ணெய்க்கு பணம் செலுத்த முடியாததால் இலங்கை அதன் ஒரே சுத்திகரிப்பு ஆலையை மூடிவிட்டதாகவும், எரிபொருள் வாங்குவதற்கு இந்தியாவுடன் கடன் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love