மூன்று தூதரகங்களை மூடுகிறது இலங்கை !

நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள தூதரகங்கள் ஆகியன ஜனவரி மாதம் முதல் மூடப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு தேவையான டாலர்கள் மீது நாட்டின் மத்திய வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், வெளிநாட்டு நாணய இருப்புக்களை காப்பாற்றும் முயற்சியில் மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதாக இலங்கை அறிவித்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள துணைத் தூதரகங்கள் மறுசீரமைப்பில் ஜனவரி மாதம் முதல் மூடப்படும் என வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு இருப்புக்களை பாதுகாக்கும் நோக்கிலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களை பராமரிப்பது தொடர்பான செலவினங்களை குறைக்கும் நோக்கிலும் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற போது 7.5 பில்லியன் டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நவம்பர் மாத இறுதியில் வெறும் 1.58 பில்லியன் டொலர்களாக குறைந்தது.

இந்த மாத தொடக்கத்தில், 26 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன் சுமை அளவு காரணமாக, தரமதிப்பீட்டு நிறுவனமான “ஃபிட்ச்” இலங்கையின் தரத்தை குறைத்தது.

எனினும் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற முடியும் என்று வலியுறுத்தியது.

Spread the love