பாராளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதியும் நேற்றைய தினமும் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேநேரம், ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது மாகாணங்களுக்கு அதிக்கூடிய அதிகாரங்களை வழங்கி விரைவில் அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.