கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த பங்குச்சந்தை பரிவர்த்தனை இன்றும் மீண்டும் இடைநிறுப்பட்டுள்ளது. S&P SL20 சுட்டெண் விட 7.5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச்சந்தையின் நாளாந்த பங்குச்சந்தை பரிவர்த்தனை முற்பகல் 11.02 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முற்பகல் 11.32 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த பங்குச்சந்தை பரிவர்த்தனை இன்றும் (26) முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 1 நிமிடம் மட்டுமே நீடித்தது. S&P SL20 சுட்டெண் விட 5% குறைந்ததன் காரணமாக பங்குச்சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.31 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முற்பகல் 11.01 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

Spread the love