களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

எரிபொருள் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள டீசலை பயன்படுத்தி இன்று மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க முயற்சிப்பதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார். இதேவேளை, எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love