எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் வாழ்த்து

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.


பாரத ரத்னா எம்.ஜி. ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூருகிறேன். சமூக நீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. 

Spread the love