கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். தினேஷ் குணவர்தன பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் பொரலுகொட பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரின் நினைவுத்தூபிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவுள்ளார்.

Spread the love