புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்கிறாா் திரௌபதி முா்மு

புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று திங்கள்கிழமை பதவியேற்கிறாா்.

பதவியேற்பு நிகழ்ச்சி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா். அதைத் தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்படும். பின்னா் திரௌபதி முா்மு உரையாற்றுவாா்.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், பிறதுறை தலைவா்கள், பாராளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

Spread the love