எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

செப்டம்பரில் 6.5 பில்லியன் செலுத்தியதாகவும் அக்டோபரில் 7.5 பில்லியன் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love