இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல் தீவிர வலதுசாரி பெண் பிரதமர்

இத்தாலியின் புதிய ஆளும் கூட்டணியை உருவாக்கி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டிற்கு முதல் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கத்தை அளித்து, நாட்டின் பிரதமராக பணியாற்றும் முதல் பெண்மணி என்ற பெருமையை ஜோர்ஜியா மெலோனி பெற்றுள்ளார்.

மெலோனியும் அவரது அமைச்சரவையும் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா முன்னிலையில் பதவியேற்றார். மெலோனியின் பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி, நவபாசிச வேர்களைக் கொண்ட கட்சி, கடந்த மாதம் இத்தாலியின் தேசியத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாகும். ஆனால் அரசாங்கத்தை அமைப்பதற்கு வெளி ஆதரவு தேவை. அவரது கூட்டாளிகளான போர்சா இத்தாலி மற்றும் தீவிர வலது சாரி லீக் ஆகியவற்றுக்கு முறையே எட்டு மற்றும் ஒன்பது சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில், அவரது பிரதர்ஸ் இத்தாலி கட்சி கடந்த மாதம் 26 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தநிலையில், ஆதரவு திரட்டி வெற்றி கண்ட ரோம் நகரைச் சேர்ந்த 45 வயதான மெலோனி, நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது அரசாங்கத்தில் மேட்டியோச பால்வினியின் தீவிர வலதுசாரி லீக் மற்றும் சில்வியோ பெர்லு ஸ்கோனியின் வலது புறம் உள்ள ஃபோர்ஸா இத்தாலியா ஆகியவை அடங்கும். மெலனியின் நியமனம் யூரோ பகுதியின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கும், இதுவரை அரசாங்கத்தில் இல்லாத – இத்தாலியின் பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். பிரதமராக நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மெலோனி, ஜியான்கார்லோ ஜியோர் கெட்டியை பொருளாதார அமைச்சராக நியமித்தார், அவர் மரியோ டிராகியின் முந்தைய அரசாங்கத்தின் கீழ் பணியாற்றினார். ஜியோர்கெட்டி, முன்னாள் பொருளாதார வளர்ச்சி அமைச்சர், மேட்டியோ சால்வினியின் தீவிர வலதுசாரி லீக் கட்சியின் மிகவும் மிதமான, ஐரோப்பிய சார்பு உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளிலிருந்து வெளிவர போராடும் ஒரு நாட்டை இயக்குவதற்காக கொண்டுவரப்பட்ட மரியோ டிராகியில் இருந்து அவர் மிகவும் வித்தியாசமான தலைவரிடமிருந்து பொறுப்பேற்கிறார். நேட்டோ உறுப்பினரான இத்தாலி, அதன் மேற்கத்திய நட்பு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் எதுவும் மாறாது என்று மெலோனி கூறினார்.

Spread the love