என்னால் முடியாது விட்டால் பதவி விலகுவேன்! – பிரதமர் ரணில் 

நாட்டு நிலைமையைச் சரிசெய்ய முடியாதுவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; மற்றவர்கள் போல் எனக்கு பதவி ஆசை இல்லை. நாட்டின் நலன் கருதியே பிரதமர் பதவியை ஏற்றேன். அதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் நிதி அமைச்சையும் பொறுப்பேற்றேன். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன்.

சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்களுடனும், உதவிகள் வழங்கும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருகின்றேன். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், எதிர்கால நிலைமை குறித்தும் உண்மைத்தகவல்களையே நான் வெளியிட்டு வருகின்றேன். எனது கருத்துக்கள் தொடர்பில் எவரும் பதற்றம் அடையத் தேவையில்லை. நாட்டை சரிசெய்வதே எனது குறிக்கோள் என்றார். 

Spread the love