இலங்கைக்கு தமிழக அரசினால் மேலும் 30 ஆயிரம் தொன் அரிசி

இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால், மேலும் 30 ஆயிரம் தொன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதற்கமைய புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, 30 ஆயிரம் தொன் அரிசி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த அரிசியை தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய 10 கிலோகிராம் பைகளில் பொதியிடும் பணிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் இடம்பெற்று வருகின்றன. குறித்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் ஆய்வு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அரிசியைப் பொதியிடும் பணிகள் நிறைவடைந்ததும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

Spread the love