உக்ரைன் நாட்டுக்குச் சென்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி

போர் பாதித்த உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அங்குள்ள குழந்தைகளுடன் பேசி மகிழ்ச்சியூட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் புலம் பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதுவராக ஏஞ்சலினா ஜோலி செயற்படுகிறார்.

இந்தநிலையில் உக்ரைன் லிவிவ் நகருக்குச் சென்ற அவர் போர்பாதித்த மக்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் குழந்தைகளையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

Spread the love