உக்ரைனில் இருத்த 241 இந்தியர்கள் விமானத்தில் இந்தியா வருகை

உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காகச் சென்றிருந்த விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவில் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், 241 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அயல் நாடான ரஷ்யாவும், நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ள நிலையில், இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளும், தங்கள் நாட்டுப் பிரஜைகளை மீட்பதில், அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love