இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படுமோ?

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அவற்றுடன் தொடர்புடைய பல துறைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து என்பவற்றிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதால் தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் விரைவில் இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படுமோ என சமூக அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Spread the love