இலங்கை கடனை திருப்பிச் செலுத்த பங்களாதேஷ் 6 மாத கால அவகாசம் -இலங்கையின் கோரிக்கை ஏற்பு

இலங்கைக்கு, பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ள நிலையில், இலங்கை தமது கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை, பங்களாதேஷ் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

இலங்கைக்கு, பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியிருந்தது.இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதன் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கோரியிருந்தது.எனினும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த இலங்கை மேலும் 6 மாத கால அவகாசம் கோரியது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்ரெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் செலுத்துவதாக இலங்கை உறுதியளித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் கூறியுள்ளார். அதற்கு அப்பால் கால நீடிப்பு அவசியம் இல்லையென இலங்கை ஆளுநர் தெரிவித்துள்ளதாகவும் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டால், அது இல வசம் அல்ல. மேலும் கடனுக்கான வட்டி இணைக்கப்படும் எனவும் அப்துர் ரவூப் தாலுக்டர் குறிப்பிட் டுள்ளார்.

Spread the love