இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் – நிர்மலா சீதாராமன் 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடனான சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார். 

Spread the love