இலங்கைக்கு இந்தியா அனைத்துவிதமான ஆதரவையும் வழங்கி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, கடின காலங்களை கடந்து வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நிலையில் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு நெருங்கிய நண்பன் மற்றும் அண்டைய நாடு என்ற வகையில் இந்தியா சகலவிதமான ஆதரவையும் வழங்கி வருவதாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.