இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவினால் மட்டுமே மீட்சி!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரையில் நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு உறுதியான தீர்வைக்காண்பது கடினம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வங்கிகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

சந்திப்பில் கருத்துத்தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றில் இலங்கை முதலிடத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிள்ளது என்று தெரிவித்த பிரதமர், நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love