இராஜாங்க அமைச்சர்கள் பதவியில் இருந்து இராஜினாமா!

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சீதாவக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். வலுசக்தி அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதால், மற்றுமொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியான பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பது பொருத்தமற்றது, என கம்மன்பில ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

Spread the love