இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை நிதியமைச்சர் சந்திப்பு..!

உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஜெயசங்கருடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று March 16 பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயமான தற்போதைய பொருளாதார பங்களிப்புப்பற்றி தேவைப்பாடுடைய கலந்துரையாடல்கள் பயனுள்ள விதத்தில் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் தனது பங்களிப்பினோடு கூடிய ஆதரவை எப்போதும் அளிக்கப்பின்நிற்காது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் , நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷிங்லா ஆகியோரையும் நேற்று சந்தித்துள்ளார்.

இந்த முக்கிய சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பிலும் பல விடயங்கள் குறித்து பகிரப்பட்டதுடன், கலந்துரையாடவும் பட்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

Spread the love