இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த மாத்திரைகளை கைப்பற்றிய க்யூ பிரிவு பொலிஸார்

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்த இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து க்யூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த நாட்டு படகுகளில் சோதனை செய்தனர்.

அப்போது கடற்கரையில் பதிவு எண் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகு ஒன்றை சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 443 அட்டைகளில் 4,430 ப்ரீகபலின் 150mg வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நாட்டு படகையும் வலி நிவாரண மாத்திரைகளுடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் தப்பி சென்ற நபர்களை தேடி வருகின்றனர். க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்த நாட்டு படகு மற்றும் வலி மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, புகையிலை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் தற்போது வலி மாத்திரைகள் கடத்தி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love