ஜனாதிபதி ரணில் – பாகிஸ்தான் கடற்படை தளபதி இடையே சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜா்ட் கான் நிஆசி(Muhammad Amjad Khan Niazi), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான கடல் சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான கடல் சார் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் அடையாளமாக பாகிஸ்தான் கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

Spread the love