பிரதமர் தினேஸுடன் இந்திய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் விரைவான முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் தொடருந்து உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க இந்திய தூதுவர் ஒப்புக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love