23 வலயங்களும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு

இன்றும் 23 வலயங்களும் உள்ளடங்கும் வகையில், நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க, A முதல் L வரையான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அதே வலயத்தில் மாலை​ 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P முதல் W வரையிலான வலயங்களுக்கு காலை 8.30 முதல் பிற்பகல் 5.30 வரையிலான காலப்பகுதியில் நான்கரை மணித்தியாலமும் பிற்பகல் 5.30 முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Spread the love